பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடிகள் இடம்பெறுகின்றன – மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
Wednesday, December 6th, 2023பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்வேறு நபர்களால் மக்களுக்கு அன்பளிப்பு அல்லது கடன் வழங்குவதாக கூறி பண வசூல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, பிரதேசவாசிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும், சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தலா 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26,000 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதில், சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி 136,000 ரூபாவை பெற்று கூட்டுறவு வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
இதேவேளை, நேற்று (05) சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 70,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொணராகலை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 32 வயதான சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த 2 சந்தேக நபர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|