பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!
Sunday, January 2nd, 2022மிக முக்கியமான ஓர் அமைச்சரவைக் கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. அத்துடன் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டமாகவும் அமையவுள்ளது.
இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைக்கள் குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலையும், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சித்தன்கேணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !
தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள் - அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை!
பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்...
|
|