நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Friday, August 6th, 2021

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கொவிட்-19 தொற்றால் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்...
புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு - நள்ளிரவுமுதல் நடைமுறைக்கும் ...