உள்ளூராட்சி மன்ற வர்த்தமானி 3 மாதங்கள் பிற்போடப்பட்டது!
Monday, July 3rd, 2017உள்ளூராட்சி நிறுனங்களின் அமுலாக்க உத்தரவுகளின் வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கான நாள் 3 மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்தமானி அறிவிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தாப உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதா? இல்லை என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு தற்போது நாடாளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புக்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் நிவாரணம் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை!
சமூக ஊடங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை- அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!
|
|