பரீட்சாத்திகளின் உரிய நேர வருகையின்மையால் ஒழுங்கமைப்பில் சிரமம் – மோட்டார் போக்குவரத்துத்திணைக்கள ஆணையாளர் !

Tuesday, December 19th, 2017

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்துப் பரீட்சைக்குத்தோன்றும் பரீட்சாத்திகளில்  எழுத்துப்பரீட்சைகளுக்கு தோன்றும் பரீட்சாத்திகளில் சிலர் உரிய நேரத்துக்கு சமுகம் தராத காரணத்தால் பரீட்சை ஒழுங்கமைப்பாளரும் மேற்பார்வையாளர்களும்  பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என மோட்டார்த்திணைக்கள பிரதி  ஆணையாளர் வை.பரந்தாமன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது  சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப்பரீட்சைக்கு தொன்றும் அனைத்துப்பரீட்சாத்திகளும் 30 நிமிடத்துக்கு முன்னர் வருகை தர வேண்டும்.

பரீட்சாத்திகள் பரிட்சைக்கு சமூகமளிக்கும் பொது  அடையாள அட்டை மருத்துவச்சான்றிதள் பரீட்சை அனுமதிப்பத்திரம் அனுமதிப்பத்திரப் பிரதி  போன்ற ஆவணங்களுடன் வருகை தர  வேண்டும் – என்றுள்ளது.

Related posts: