பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
Tuesday, September 20th, 2016
2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த வெட்டுப்புள்ளிகளின் முடிவுகளை http://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:
கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் - நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர...
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார துறை எச்சரிக்கை!
இலங்கையில் இடம்பெறும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
|
|
|


