கடற்படைக்கு அதிகளவு வருமானம்!
Tuesday, June 6th, 2017இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியங்களில் செயற்படுத்தப்படும் நடவடிக்கை மத்திய நிலையங்கள் மூலம் இப்புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
நடவடிக்கை சேவைகளில் கடல்வழி பாதுகாப்பு குழுக்கள் , ஆயுதங்களை பெறுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் , வெடிபொருட்கள் மற்றும் வர்த்தக கப்பல் கம்பனிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை ஏற்றி இறக்குதல் என்பன இதனுள் அடங்கும்.கடற்படையானது, கடல்வழி பாதுகாப்பு குழுவினை அரசிற்கு நிதியினை நேரடியாக பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மத்திய நிலையங்களை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|