பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு எமக்கில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Saturday, November 12th, 2022
உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு இலங்கைக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தற்போதைய பின்னணியில் இந்து சமுத்திரப் பிராந்தியமானது உயர் அரசியல் மற்றும் பொருளாதார பெறுமதியைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரிகளில் 2022ஆம் ஆண்டுடன் தொடர்புடைய 1619 இளங்கலை பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன...
அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான கலந்துரையாடல்!
மண்டைதீவு காணி சுவீகரிப்புவிவகாரம்: மக்கள் திரண்டு தடுத்து நிறுத்தம்!
|
|
|


