பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!
Thursday, July 25th, 2024
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும்.
அதேநேரம், உயர் தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!
பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!
|
|
|


