இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் – நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!
Tuesday, February 9th, 2021
ஆயிரம் ரூபா ஊதியம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்திருந்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் இந்த திட்டம் சட்டமாக மாறும் என்றும் தெரரிவித்துள்ளார்.
இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர் பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கவலை தொடர்பாகவும் அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரன வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊதியத்தை தோட்ட உரிமையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ள...
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்க எவ்வித எதிர்ப்பும் கிடையாது - அமைச்சர் கெஹெலிய ரம்புக...
துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி!
|
|
|


