இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!

Wednesday, July 11th, 2018

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 908 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: