மஹேலவை ஆரத்தழுவி சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகை!

Friday, October 7th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை அவரது தீவிர ரசிகை ஒருவர்மிகவும் இறுக்கமாக கட்டித் தழுவி தனதுஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மஹேலவிற்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா? என இந்த விடயம் அனைவரையும் வியப்பில்ஆழ்த்தியுள்ளது. காலி, கராப்பிட்டிய சிறுவர் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்காகவே நிதிசேகரிக்கும் நோக்கில் இந்த நடைபவனி இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,இந்த நிகழ்வில் முத்தையா முரளிதரன், அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும்பொலிவூட் நட்சத்திரம் ஜக்குலின் பெர்னாண்டஸ், தொழில் முயற்சியாளர் ஒட்டாராகுணவர்தன, நடிகை யுரேனி நொஷிகா உள்ளிட்ட பலபிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 28 தினங்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நடைபவனி எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts:

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைக் ஏற்பாடு - மின்சக்தி எரிசக்தி அமைச்...
அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - விசேட வைத்தியர் உப...