முறிகள் விநியோகம் தொடர்பான மத்திய வங்கி விசாரணை அறிக்கையை வெளியிடாமல் உள்ளதாக விமல் குற்றச்சாட்டு!

Thursday, October 6th, 2016

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில், இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 5.2 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முறிகள் கொடுக்கல் வாங்கலை மூடி மறைப்பதற்கு அரசாங்கத்தின் சில தரப்பினர் முயற்சித்து வருவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

4a349bb0893c4a920f0bc8062b30c0d4_XL

Related posts: