சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பு இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Friday, December 22nd, 2023

சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்னின்று செயற்பட வேண்டியது அவசியமாகும்.

நெருக்கடி நிலையிலிருந்து மீள எழுவதற்கான முயற்சிகளின் போது முகம்கொடுக்க நேர்ந்த சவால்களைப் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும்

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், அதற்கான ஒத்துழைப்புக்களுக்காகவும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நிலையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: