பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது!
Monday, May 24th, 2021
நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம்
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
இதனிடையே
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பேலியகொடை மீன் சந்தையினை மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 26, 27, 28 ஆகிய திகதிகளில் பேலியகொடை மீன் சந்தை மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பேலியகொடை மீன் சந்தை நாளையதினம் திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
நாட்டில் நேற்றையதினம் 5,192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 988 பேருக்கு இரண்டாம் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 5 இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 2,435 பேர் இரண்டாம் மாத்திரையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை கொவிட் தடுப்பூசிகளும், கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 8 கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்த இந்த முடிவு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து வகையான கொரோனா திரிபுகளுக்கு எதிராகவும், பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியே உச்ச அளவில் வினைத்திறனாக செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கமைய பைசர், மொடர்னா, ஜோன்சன் என்ட் ஜோன்சன், அஸ்ட்ராசெனகா, ஸ்புட்னிக், நொவாவெக்ஸ், சினொவெக் மற்றும் சினோபாம் ஆகிய தடுப்பூசிகள் கொவிட்-19 மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.
00
Related posts:
|
|
|


