பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் அஞ்சலி!
Sunday, December 26th, 2021
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கௌரவ பிரதமருடன் இணைந்து விளக்கேற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.
முற்பகல் 9.25 மணிமுதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து விளக்கேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தினம்” இன்றைய தினத்தில் அனுட்டிக்கப்படுகிறது.
இலங்கையின் பதினான்கு மாவட்டங்களை பாதித்து சுனாமி அனர்த்தத்தில் 31ஆயிரத்து 229 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4100 பேர் காணாமல் போயினர். இவ்வனர்த்தத்தில் 5 அலட்சத்து 16,150 பேர் இடம்பெயர்ந்ததுடன், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்தன.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர், பிரதமரின் பாரியார் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|
|


