சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

Monday, February 4th, 2019

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சுதந்திரதினமான இன்று யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில், சிறு குற்றம் புரிந்து, தண்டப்பணம் அறவிட முடியாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஓவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: