கடும் வரையறைகளுடன் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !

Monday, November 9th, 2020

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகளும் கடுமையான வரையறைகளுடன் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முறையான வேலைத்திடட்டத்தின் கீழ், தனியார் பேருந்து சேவைகளும் நடத்தப்பட்டன எனவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: