பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில், விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, பண்டிகை காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக விசேட கண்காணிப்பு இடம்பெறுவதாக அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் வழங்க 0112 18 22 50 அல்லது 0112 18 22 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரன்திலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: