பண்டிகையை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் – நுகர்வோர் அதிகார சபை!

Friday, April 12th, 2019

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

பொருட்களை நுகரும் நுகர்வோரது பாதுகாப்பு கருதி, குறித்த சுற்றிவளைப்புகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி முதல் கடந்த 06ம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 190 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதில் 43 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டபணமாக 155,000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1841 சுற்றிவளைப்புகள், அதில் 1523 வழக்குகள் மற்றும் 7,008,000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: