அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்!
Wednesday, May 3rd, 2023அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் நடத்தியமைக்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறப்பாக கடமையை செய்ததாகவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் நேற்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருத்துவ பரிசோதனை குறித்த விசாரணைக்கு அமைச்சர் ராஜித உத்தரவு !
நிவாரணம் கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் உதய கம்மன்பில ...
சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|