பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
Monday, April 10th, 2017பண்டிகை காலங்களில் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படின், குறித்த பஸ்களுக்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் பயணிகளிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஜே.ஹேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவ்வாறான பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தூரப் பயணங்களுக்கு போதுமான பஸ்கள் இல்லாமையால் மாகாண அதிகார சபைக்குச் சொந்தமான பஸ்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்த பஸ்களுக்கு மட்டுமே விஷேட கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.ஜே.ஹேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களின் கட்டணங்கள் குறித்து 011 755 5 555 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு முன்வைக்க முடியும் என இலங்கை கோக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|