தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

Thursday, January 28th, 2021

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறுகையில் –

தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்கள் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் சிறப்பு நடவடிக்கை மையம் நிறுவப்பட்டது.

எனவே இது தொடர்பான தவல்களை பொதுமக்கள் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை மையத்தின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும் என தெரிவித்திருந்ததுடன் 1997 என்ற அவசர இலக்கத்துக்கு அவை தொடர்பில் அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.

என்பதுடன், பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு நடவடிக்கை மையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் முக்...
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால...