எரிபொருள் விலை அதிகரிப்பு!

Thursday, January 10th, 2019

விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்றைய தினம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 57 டொலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அரசு, எரிபொருள் விலையினை குறைத்திருந்த போது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 53 டொலர்கள் வரையில் குறைக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: