பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Tuesday, March 14th, 2023அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மாகாண அடிப்படையில் உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகள் வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு !
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு நியமனம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அ...
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்க...
|
|