பட்டதாரிகளுக்கு மார்ச்முதல் பயிற்சி – அமைச்சரவை அனுமதி!

Thursday, February 6th, 2020

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அரச தரவுகளின் பிரகாரம் நாடு முழுவதும் சுமார் 50,000 பட்டதாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: