நீர்வேலி கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகள் திருட்டுச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்பு
Sunday, March 6th, 2016நீர்வேலி, கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகளைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிலங்கள் மற்றும் வயல் தரவைகளில் மேய்ச்சலுக்காகக் கட்டப்படும் கால்நடைகளே இவ்வாறு திருடிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் தமது வளர்ப்பு ஆடு, மாடு போன்றவற்றை மேய்ச்சலுக்காகக் கட்டும் இடங்களிலேயே இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக மேய்ச்சலுக்காகக் கட்டப்படும் கால்நடைகளுடன் தாம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
Related posts:
இலண்டன் பயங்கரவாத தாக்குதல் - இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!
இ.போ. சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...
|
|