தேவைகளை பூர்த்தி செய்துதந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு மனமார்ந்த நன்றிகள் :  கோண்டாவில் மேற்கு மக்கள் தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2016

எமது பகுதி மக்கள் என்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக இருப்பதுடன் எதிர்காலத்தில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துவதற்காக எங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றவுள்ளோம் எனவும் கோண்டாவில் மேற்கு அமரகலி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் அமரகலி சனசமூக நிலைய முன்றலில் மாதர்சங்க தலைவி வனிதாமணி தலைமையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் குறித்த பகுதி வீதி செப்பனிடப்பட்டமை மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றமைக்காக நடைபெற்ற நன்றிகூறல் நிகழ்வின்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பகுதியில் வாழும் ஒருதொகுதி வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிக்கான நிதி ஒதுக்கீடு  மற்றும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாதிருந்த தமது பகுதிக்கான கோண்டாவில் மேற்கு பாரதி வீதி புனரமைப்பு உள்ளிட்ட தேவைகளை தமது கோரிக்கைக்கிணங்க கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் பெற்றுத்தந்தமைக்காக குறித்த பகுதி மக்கள் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

d403d61d-35f2-4eb1-9905-6ac897b921a2

Related posts: