நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, ஆரம்பமனது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றையதினம் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்றைய தினம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, இன்றையதினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிக...
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி அறிவிப்பு!
எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் சபை அறிவிப்பு!
|
|