எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் – நுகர்வோர் சபை அறிவிப்பு!
Thursday, April 7th, 2022எரிவாயுவின் விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எரிவாயுவின் நிர்ணய விலையினை பொதுமக்கள் பார்க்கும்ப் படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என குறித்த அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அதிக விலைக்கு எரிவாயுவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி!
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
சட்டத்திலுள்ள குறைபாடுகளால் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது – ஜனாதிபதி!
|
|