நீதிமன்ற உத்தரவுக்கேற்ப சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு!

Monday, December 20th, 2021

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள் இன்றுமுதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும், பியுட்டனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: