நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு – கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகளுக்கு தீர்மானமிக்க முடிவு எட்டப்பட வேண்டும்.

இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதன்காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வட பகுதிக்கான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் விக்னேஷ் குலரட...
இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது - உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹட...
இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சு ஏற்பாடு - நிதியமைச்சின...