யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!
Tuesday, January 18th, 2022யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது.
இன்று காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இது திறந்து வைக்கப்பட்டது.
இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்திலேயே முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவனாந்தராஜா தெரிவித்தார்.
Related posts:
காலஞ்சென்ற சிற்சபேசக் குருக்களின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!
டெங்கு தொற்று - கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு பூட்டு!
தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு - சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
|
|