நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும் இடமல்ல. நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சாட்சிகள் நீதித்துறை செயல்பாட்டில் உதவும் குடிமக்கள்.
எனவே கூண்டில் இருந்து சாட்சியமளிக்கும் ‘கூண்டு முறை’ மாற்றப்பட்டு, கண்ணியமான முறையில் சாட்சியம் அளிக்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சில் நீதிமன்ற முறைமைக்கு அட்டை கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்துவதற்கான உடன்படிக்கையை மக்கள் வங்கியுடன் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு நீதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
யாழ்ப்பாணத்தில் 85 ஹெக்ரேயரில் இம்முறை உருளைக்கிழங்குச் செய்கை!
மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது - செயிட் அல் ஹுசைன்!
பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?
|
|
வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் - ஈ.பி.டி.பிய...
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறும் - கல்வி ...
கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் - வடக்கின் ஆளுந...