கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் – வடக்கின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்து!
Friday, November 17th, 2023
தற்போதைய சூழ்நிலையில், கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல்தேசிய போட்டி தன்மையான நிறுவனங்களில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் அனைவரும் கல்வி தகைமையுடன் தொழில் தகைமையும் பெற்றிருந்தால் மாத்திரமே, சவால்களுக்கு மத்தியில் சிறந்த இலக்கை அடைய முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
80 வீதமான பாடசாலை மாணவர்கள் போஷாக்கு உணவை உட்கொள்வதில்லை!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப...
|
|
|


