நிலுவையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் – அமைச்சர் தலதா அதுகோரள!

Friday, July 26th, 2019

விசாரணை செய்யப்படாமல் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

தேசிய மத்தியஸ்த தின வைபவம் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வெளியினரின் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் நீதித்துறை முழு சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத அடிப்படைவாத செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடர்க் குண்டுத்தாக்குதல்களினால் எமது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் இவ்வாறான நிலையில் நாளைய தினம் என்ன நடக்கும் என்று எவராலும் குறிப்பிட முடியாது எனவும் அதுகோரள தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு இடமளிக்க போவதில்லை என்றும் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ தாங்கள் செயற்பட வில்லை எனவும் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணைகளை நடைமுறைப்படுத்தவே தாம் முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: