தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு – தபால் சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் திணைக்களத்தின் சேவைகளின் நோக்கத்தை அங்கீகரித்தால் இலங்கை தபால் திணைக்களம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக இருக்கும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரந்த வளங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தபால் சேவைகள் மற்றும் ஊடகங்களின் தொழில் மேம்பாட்டு அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தபால் திணைக்களம் தொடர்பாக அவதானம் செலுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
மருத்துவபீட மாணவன் மரணம் - முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரு...
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...
|
|