நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!
Monday, February 13th, 2023துருக்கி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் அரசாங்கம் கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள துருக்கி தூதுவரிடம் இந்த தேயிலை தொகுதியை கையளித்துள்ளது.
பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை என்பனவற்றினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் நாயகம் பிரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்பு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
சமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!
கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் - தபால்மா அதிபர்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை - வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட ...
|
|