எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு – உள்ளூராட்சி ஆணையாளர் அறிவிப்பு!

Monday, December 21st, 2020

2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 16 ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதீடு மக்கள் நலன்ற்றது என்றும் கற்பனை முன்மொழிவுகளே உத்தேச வருமானமாக காட்டப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி எதிரணியினரால் தோற்கடிக்கப்பட்டது. குறித்த பாதீடு பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நிலையில் 3 வாக்குகளினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இதைணடுத்து, உள்ளூராட்சி மன்ற சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டது.

இதையடுத்து அந்த இடத்துக்கு மீண்டும் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்யும் வகையில் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் 66 ஏ பிரிவின் கீழ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் அடிப்படையில், யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: