கொன்சியூலர் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, April 29th, 2021

தற்போதைய கோவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த கொன்சியூலர் சேவைகள் கட்டாயமான முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் நியமனங்களை மேற்கொள்வதற்காக 011 2335942, 011 2338836 மற்றும் 011 2338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளவும் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: