நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் – ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்ப்பு!

Tuesday, March 15th, 2022

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார்.

நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.

இந்தியாவுடனான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் மூலம் இலங்கைக்கு அரிசி, கோதுமை மா மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்...
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு அங்கீகார...
டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...