நாளைமுதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Tuesday, May 17th, 2022இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்றையதினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளது.இரண்டு கப்பல்களுக்கும் இன்று பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிமுதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜுலை முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!
சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள்!
கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்!
|
|