சமாதானம் முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!

Thursday, September 22nd, 2016

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42 ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 29,30,01மற்றும் 2ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விளையாட்டுத்துறைக்கு யழ்ப்பாணத்தை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் இலங்கைக்கு பொருமை சேர்த்து கொடுத்துள்ளமை விசேட அம்சமாகும். இம்முறை 33 போட்டிகள் இவ்விளையாட்டு விழாவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது,அதில் புதிதாக 8 போட்டிகள் சேர்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம அதியாக சபாநாயகர் கரு ஜயசூரியவும் அதிதிகளாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரிஜயசேகர,பிதியமைச்சர் ஹரீஸ்,வடமாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள்.பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக 7250 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் அடுத்தவருடம் 500 இலட்சம் ரூபா நிதி கிடைக்கப்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் சுகததாச விளையாட்டு அரங்கின் திருத்த வேலைகள் முடிவுற்று போட்டிகள் இடம்பெறும் வண்ணம் கிமைடைக்கப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டி இடம்பெறும் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்கின்றார்.

தேசிய விளையாட்டு விழவில் ஆண்கள்,பெண்கள் போட்டியில் தனியாள் போட்டியில் வெற்றி பெறும் வீர,வீரங்கணைகளுக்கு முதலிடம்பெறுபவருக்கு 7500 ரூபாவும் இரண்டாமிடம்பெறுபவருக்கு 5ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறும் வீரருக்கு 3 ஆயிரம் ரூபாவும் வழங்ப்படும் அதேவேளை அணியாக போட்டியிட்டு வெற்றி பெறும் அணிக்கு 3 ஆயிரம் ரூபாவும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 2 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறும் அணிக்கு 1000 ரூபாவும் சிறந்த வீர,வீரங்கனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் .

இப்போட்டி நிகழ்வுகளுக்காக மெய்வல்லுனர் போட்டியில் 800 பேரும் கடற்கரை கபடி போட்டியில் 108 பேரும் கூடைப்பந்தாட்ட போட்டியில் 206 பேரும் கயிறுழுத்தல் போட்டியில் 216 பேரும் உதைபந்தாட்ட போட்டியில் 360 பேரும் அதிகாரிகள் 650 பேரும் நடுவர்களாக 250 பேரும் மொத்தமாக 2600 பேர் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.

sports-festival

Related posts: