நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, July 4th, 2018

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அவற்றின் வேலைப்பாடுகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுத்துவரப்படும் நிலையில் அதன் முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்தறியும் முகமாகவே குறித்த குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் பிரதேச மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நாரந்தனை, ஊர்காவற்றுறை நகர், புளியங்கூடல், சுருவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இன்றையதினம் சென்ற குறித்த குழுவினர் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ஊர்காவற்றுறை கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Related posts: