பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Sunday, May 30th, 2021பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளைமறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவுமுதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உணவு, காய்கறி, மீன் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளை விநியோகிக்கும் லொரி மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இவற்றுக்காக, விசேட அனுமதிப்பத்திரம் தேவை இல்லை என தெரிவித்துள்ளார்..
சில்லறை வர்த்தகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் மத்திய நிலையஙகளில் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் பேலியகொடை மீன் சந்தையும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காவல்துறை சட்டப் பிரிவின் இயக்குநராக ருவான்!
20ஆவது திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் - அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக...
74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால...
|
|