நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் – விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனாவின் பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தா அறிவுறுத்து!

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்
விசர் நாய் கடி தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.
ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு!
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகங்கள் மூலம் 24 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது ...
|
|