கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகங்கள் மூலம் 24 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2022

துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்டகது

000

Related posts: