நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Monday, July 8th, 2024
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அரச சேவையாளர்களுக்கு இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.
ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மீண்டுவரும் வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியமாகும்.
எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்குப் பலியாகும் பட்சத்தில், நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புலிகளை வெல்ல 200 பில்லியன் டொலர் செலவு இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!
ஐரோப்பிய யூனியன் நிதியுதவி!
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும்...
|
|
|


