நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி – ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை!
Saturday, December 2nd, 2023நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சில பொருட்களுக்கு வியாபாரப் பண்ட வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுவதாக வர்த்தமனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
சிறுமி சேயா சௌதமி கொலை வழக்கு; உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! - நீதவான் தீர்ப்பு
புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை!
உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் – ...
|
|