எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு!

Tuesday, April 19th, 2016

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு  நேற்று(18) முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்,கட்சியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் (புரட்சி மணி), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலன்ரின் (உதயன்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்று மடிந்தது.

இந் நிழ்வில் உரையாற்றிய கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் செல்லவுள்ள முறைமைகள் தொடர்பாக உரையாற்றினர்.

நிகழ்வில் பங்குகொண்ட மக்கள் தமது கருத்தக்களை முன்வைத்ததுடன் கட்சியின் வளற்சிக்கான ஆலோசனைகளாக தமது கருத்தக்களையும் முன்வைத்திருந்தனர்.

3 (1)

2 (2)

1 (2)

Related posts: